22 நாடுகள் காசாவிற்காக விடுத்த கோரிக்கை

காசாவிற்கு கூடுதல் உதவி கோரி 22 நாடுகள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கை நல்ல நோக்கத்துடன் வெளியிடப்பட்டள்ளது.
22 நாடுகள் கையெழுத்திட்ட அந்த அறிக்கையில், இஸ்ரேல் அறிமுகப்படுத்தும் காசாவிற்கு உதவி வழங்குவதற்கான புதிய மாதிரியை ஆதரிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டு மாத முற்றுகைக்குப் பிறகு காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் அது போதாது என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்தது.
காசாவிற்கு உதவி மீண்டும் தொடங்க உடனடியாக அனுமதிக்கவும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புகள் சுயாதீனமாகவும் பாரபட்சமின்றியும் செயல்பட அனுமதிக்கவும் இஸ்ரேலை அந்த நாடுகள் கேட்டுக்கொள்கின்றன.
மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் தனது உறுதியான செய்தியில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.