இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலில் எல்லை தாண்டிய சீனர்கள் 4 பேர் கைது

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லை தாண்டியதாக சீனாவைச் சேர்ந்த நால்வரை காவலர்கள் கைது செய்தனர்.

இது குறித்து ரக்சௌல் ஆணையர் தீரேந்திர குமார் கூறுகையில், “தரையா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மைத்ரி பாலத்தின் அருகே சீன நாட்டைச் சேர்ந்த நால்வர் எல்லை தாண்டி வந்தனர். அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினோம்.

“அவர்கள் சீனாவின் ஹூனான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அவர்களை உடனே கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களை வெள்ளிக்கிழமை (மே 9) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருக்கிறோம்,” என்று சொன்னார்.

அந்தச் சீனர்களுக்கு வழிகாட்டிகளாகச் செயல்பட்ட இரண்டு நேப்பாளப் பெண்களும் காவலில் எடுக்கப்பட்டனர். காவல்துறையினரின் தீவிர விசாரணைக்குப் பின் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!