இலங்கை

இலங்கை பல்வேறு வைரஸ்கள் அச்சுறுத்தும் அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை, மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

தற்போது, கணிசமான எண்ணிக்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

அத்துடன் இறப்புகளும் பதிவாவதால் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் பல வைரஸ் தொற்றுகள் சமூகத்தில் பரவலடைந்து வருகின்றன.

இதனை கவனத்தில் கொள்ளவில்லை எனில், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

எனவே, முன்னதாக அறிவிக்கப்பட்டவாறு, முகமூடிகளை அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல், பொதுக் கூட்டங்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதால் அதில் உள்ள பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை கோரியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்