செய்தி விளையாட்டு

IPL Match 25 – 103 ஓட்டங்களுக்கு சுருண்ட சென்னை அணி

ஐபிஎல் 2025 சீசனின் 25ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிஎஸ்கே-வுக்க முதல் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் கிடைத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பவர்பிளேக்கு பிறகு அனைத்து வீரர்களும் தடுமாறிய நிலையில் சென்னை அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. துபே 29 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி