ஆஸ்திரேலியாவில் தெற்காசிய நபரை தீவிரமாக தேடும் பொலிஸார்

ஆஸ்திரேலியா – மெல்போர்னில் பேருந்தில் நடந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரைத் தேடும் நடவடிக்கையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பெப்ரவரி 17 ஆம் திகதி காலை சுமார் 6.30 மணியளவில் மெல்போர்னில் பேருந்து வழித்தடம் 811 இல் நடந்தது.
எதிர்கொண்ட 37 வயது பெண், அந்த நபர் டான்டெனாங் நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறியதாகக் கூறுகிறார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் தெற்காசியராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கண்ணாடி மற்றும் சிவப்பு டி-சர்ட் அணிந்திருந்த இந்த நபரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)