ஐரோப்பா

மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் – ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா-உக்ரைன் போரை தடுத்து நிறுத்தா விட்டால் அது மூன்றாம் உலகப் போருக்கு காரணமாகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இதனை குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போரே தொடங்கியிருக்காது என டிரம்ப் தெரிவித்தார்.

போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விரும்புவதாக தெரிவித்த டிரம்ப், உக்ரைனிடம் எந்தப் பிடிமானமும் இல்லாத நிலையில் அதனை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாகவும் ரஷ்யாவோடு பேச்சு நடத்துவது சுலபமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, இந்தியாவில் எந்த அமெரிக்கப் பொருளையும் விற்க முடியாதபடி கடுமையாக வரி விதிக்கப்படுவதாக டரம்ப் விமர்சித்துள்ளார்.

அத்துடன் யாரோ அம்பலப்படுத்தியதால் இந்தியா வரிகளை குறைக்க முன்வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!