ஆசியா

மியான்மாரின் ரக்கைன் மாநிலத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 40 பேர் பலி

மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மியன்மார் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர் ஒருவரும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினரும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

ரக்கைன் மாநிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, சிறுபான்மை ‘அரக்கன்’ ராணுவம் மியன்மார் ராணுவத்துடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுவருகிறது. கடந்த ஆண்டில் ‘அரக்கன்’ ராணுவம் பல பகுதிகளைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டில், மியன்மார் ராணுவம் ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்ததைத் தொடர்ந்து, மியன்மாரில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ரக்கைன் பூசல்.

‘ராம்ரீ’ தீவில் உள்ள ‘கியாக் நி மாவ்’ கிராமத்தில் புதன்கிழமை (ஜனவரி 8) பிற்பகல் 1.20 மணிக்கு மியன்மார் ராணுவ விமானம் ஒன்று வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதாக ‘அரக்கன்’ ராணுவத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன.

“முதற்கட்ட அறிக்கைகளின்படி அப்பாவி மக்களில் 40 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமுற்றனர்,” என்றார் பேச்சாளர்.

வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில், குழப்பநிலையில் மக்கள் எரிந்துபோன இடிபாடுகளுக்கு இடையே நடந்துசெல்வதைக் காணமுடிந்தது.

(Visited 29 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்