ஆசியா

காங்கோ குடியரசில் மர்ம நோய் – விமான பயணிகளை சோதனையிடும் ஹொங்கொங்

ஆப்பிரிக்காவிலிருந்து ஹொங்காங் வரும் விமானப் பயணிகளுக்கு தீவிர சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மர்ம நோயொன்று காங்கோ குடியரசில் 79 பேரின் உயிரைப் பறித்ததாக செய்தி வெளியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதைப் பற்றி உலகச் சுகாதார நிறுவனத்திடம் தகவல் கேட்டதாக அந்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்திலிருந்து மர்ம நோய் காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, சலி, இருமல், மூச்சுத் திணறல், ரத்த சோகை முதலிய அறிகுறிகள் தென்பட்டன.

ஹொங்காங்கிற்குள் வரும் பயணிகளுக்கு மர்ம நோய் இருப்பதைப் பற்றித் தகவல் இல்லை என்று உள்ளூர் அரசாங்கம் தெரிவித்தது.

காங்கோவிலிருந்து ஹொங்காங் செல்ல நேரடி விமானங்கள் இல்லையென்றாலும் ஆப்பிரிக்க நகரங்களின் வழியாக விமானங்கள் வருகின்றன.

அவற்றில் மருத்துவப் பரிசோதனை விரிவுபடுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 56 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!