இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரான்சில் ஈழத்தமிழர் சுட்டுக் கொலை

பாரிஸின் புறநகர் பகுதியான லாகூர்நெவில் கடந்தவாரம் இனந்தெரியாத நபர் ஒருவரால் 29 வயதான தனுசன் என்ற ஈழத்தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொலைக்குரிய காரணத்தை அறிவதற்கான தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை (06) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான தனுசனின் கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என தெரிவித்துள்ள காவல்துறை சிறிய ரக தோட்டாவால் குறித்த நபர் கொல்லப்பட்டமைக்கான நோக்கம் மர்மமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனுசன் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், நண்பர் அங்கிருந்து அகன்றபோது நிலையில் தனுசனின் முதுகுபபக்கமாக சுடப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!