இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அலெப்போ நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – நட்பு நாடுகளின் ஆரதவை நாடியுள்ள சிரியா

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது டிசம்பர் 1ஆம் திகதி அதிகாலை ரஷ்யாவும் சிரியாவும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சிரியாவின் அலெப்போ நகரைக் கிளர்ச்சியாளர் அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பு அண்மையில் கைப்பற்றியது.இந்த அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக சிரியா வகைப்படுத்தியுள்ளது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிலிருந்து அலெப்போ நகரை அந்நாட்டுப் படைகள் இழந்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கிளர்ச்சியாளர்களை வீழ்த்தி இழந்த பகுதிகள் மீட்கப்படும் என்று சிரியா அதிபர் பஷார் அல் அஸாத் சூளுரைத்துள்ளார்.இது தொடர்பாக, நட்பு நாடுகளின் ஆதரவை அவர் நாடியுள்ளார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஜ்சி சிரியாவின் தலைகர் டமாஸ்கசுக்கு டிசம்பர் 1ஆம் திகதியன்று பயணம் மேற்கொண்டார்.அங்கு அவர் அதிபர் அஸாத்தைச் சந்தித்துப் பேசினார்.சிரியா அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் ஈரான் வலுவான ஆதரவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் நட்பு நாடுகளின் ஆதரவு மிகவும் முக்கியம் என்று அராஜ்சியுடனான சந்திப்புக்குப் பிறகு அதிபர் அஸாத் தெரிவித்தார்

(Visited 39 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!