பொழுதுபோக்கு

பாலிவுட்டின் மிக முக்கிய புள்ளி சுட்டுக்கொலை

பாலிவுட்டில் இடைத்தரகராக செயல்பட்டவரும் அரசியல்வாதியுமான பாபா சித்திக் சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் முக்கிய பிரமுகராக இருந்தவர். 66 வயதான பாபா சித்திக் பாந்த்ரா மேற்கு பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

பாந்த்ரா கிழக்கில் உள்ள தனது மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். இரவு 9:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்றது.

பாபா சித்திக் படுகொலை மகாராஷ்டிராவைத் தாண்டியும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி பாபா சித்திக் படுகொலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் கண்டன குரல் எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும், என்சிபியின் தேசிய தலைவருமான அஜித் பவார், இன்று அமராவதியில் நடைபெறவிருந்த தனது ஜன்சன்மன் யாத்திரையை ரத்து செய்தார்.

(Visited 28 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!