கருத்து & பகுப்பாய்வு

நித்திரையின்றி தவிக்கும் மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் : புதிய மாத்திரையை பரிசோதித்த வைத்தியர்கள்!

மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் உறக்கமின்றி தவித்து வருவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கால்-கை வலிப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மாத்திரை உறக்கமின்றி தவிப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சல்தியேம் என்ற மருந்தை உட்கொள்ளும் நோயாளிகள், நித்திரையின்றி தவித்தல் மற்றும் உரத்த குறட்டை உள்ளிட்ட நோய்களுக்கு 40 சதவீதமான தீர்வை வழங்குவதாக ஸ்வீடிஸ் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தூக்கமின்மையானது மூச்சுத்திணறல் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற கொடிய நிலைமைகளின் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக மேற்கொள்ளப்படும் அல்லது நடைமுறையில்  உள்ள சிகிச்சையானது  தூங்கும் போது ஒரு சங்கடமான இயந்திர முகமூடியைப் பயன்படுத்துகின்றனர், இது அவர்களின் மூக்கு மற்றும் வாயில் புதிய காற்றை செலுத்துகிறது.

ஆனால் பல நோயாளிகள் இயந்திரங்கள் சங்கடமான மற்றும் பயன்படுத்த கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் புதிய சிகிச்சையை கண்டுப்பிடிப்பதற்கான அவசியத்தை அதிகரித்துள்ளது.

இவற்றில் ஒன்று சல்தியாம், இது முக்கியமாக கால்-கை வலிப்புக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், மக்களின் மேல் சுவாசப்பாதையில் தசைகளைத் தூண்டுவதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்துதவாக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது நடைமுறைக்கு வரும்போது மில்லியன் கணக்கான ஐரோப்பியர்கள் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content