ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு புதிய நடவடிக்கை!

ஆஸ்திரேலியாவில் மின்-சிகரெட் புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் எடுக்க்படபவுள்ளது.

சுகாதார அமைச்சர் Mark Butler இதனை அறிவித்திருக்கிறார்.

புகையிலை நிறுவனங்கள் வேண்டுமென்றே இளையர்களை நிக்கொட்டீனுக்கு அடிமையாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒருமுறை பயன்படுத்தும் மின்-சிகரெட்களும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பரிந்துரைக்கப்படாத மின்-சிகரெட்களும் இனி ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்படும்.

மின்-சிகரெட்களில் நிக்கொட்டின் அளவும் கட்டுப்படுத்தப்படும். ஆஸ்திரேலியாவில் பத்தாண்டுகளில் புகைப்பிடிப்புக்கு எதிரான மிகப்பெரிய சீர்த்திருத்தமாக அந்த நடவடிக்கைகள் கருதப்படுகின்றன.

அண்மைக் காலங்களில் இளையர்களுக்கிடையே மின்-சிகரெட்டுகளைப் புகைக்கும் போக்கைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா சிரமப்படுகிறது.

உயர்நிலைப் பள்ளிகளில் பயில்வோர் மின்-சிகரெட் புகைப்பது அவர்களின் பழக்க வழக்கங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கநிலைப் பாடசாலைகளிலும் அத்தகைய போக்குப் பரவலாகக் காணப்படுவதாகச் சுகாதார அமைச்சர் கூறினார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித