ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு!
ஜப்பானில் மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை 5.02 மணியளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
உணரப்பட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.





