ஐரோப்பா

உக்ரைனுக்கு தென் கொரியா ஆயுதம் வழங்கினால் தக்க பதிலடி வழங்கப்படும்! புடின் கடும் எச்சரிக்கை

தென் கொரியா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க முடிவு செய்தால் “பெரிய தவறை” செய்யும் என்றும், சியோலுக்கு வேதனை அளிக்கும் வகையில் அத்தகைய நடவடிக்கைக்கு மாஸ்கோ பதிலளிக்கும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

இது புடினும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உனும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு வியட்நாமில் ஒரு செய்தி மாநாட்டில் பேசிய புடின் இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை தென் கொரியா மறுபரிசீலனை செய்யும் என்று கூறியுள்ளார்.

மாஸ்கோவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து சியோல் கவலைப்பட வேண்டியதில்லை என்று புடின் கூறினார்.

கியேவுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு எதிராக சியோலை எச்சரித்தார்.

“உக்ரைனில் உள்ள போர் மண்டலத்திற்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்குவதைப் பொறுத்தவரை, அது மிகப் பெரிய தவறு,” என்று அவர் கூறியுள்ளார்.

“இது நடக்காது என்று நான் நம்புகிறேன். அது நடந்தால், தென் கொரியாவின் தற்போதைய தலைமையை மகிழ்விக்க வாய்ப்பில்லாத தகுந்த முடிவுகளை நாங்கள் எடுப்போம்” என்று புடின் எச்சரித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content