இலங்கை

இலங்கையை நோட்டமிட அனுமதி கோரிய இந்தியா? வெளியாகிய முக்கிய தகவல்

மன்னார் மணல்மேடு மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட சில இடங்களில் டிரோன் கமராக்களை பொருத்துவதற்கு இலங்கையிடம் இந்தியா அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் யோகா பயிற்சிகளை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்காக என்று கூறி இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

டிரோன் கமராக்கள் மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க இலங்கை அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

நெடுந்தீவு , மன்னார் மணல்மேடு, மன்னார் ராட்சத மரம் உள்ளிட்ட எட்டு பிரபலமான இடங்களை பயன்படுத்த இந்திய உயர்ஸ்தானிகராலயம் அனுமதி கோரியுள்ளது.

இதற்கான அனுமதி கோரி இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியிருப்பினும் இந்தியா அவ்வாறு அனுமதி கோரிய செய்தியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!