ஐரோப்பா

ரஷ்ய ஹேக்கர்கள் இங்கிலாந்தின் உள்கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!

ரஷ்ய ஹேக்கர்கள் இங்கிலாந்தின் உள்கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிப்பதாக இங்கிலாந்து அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதன்காரணமாக தேசிய சைபர் பாதுகாப்பு மையம், நாட்டில் மின்சாரம், தண்ணீர் மற்றும் பிற முக்கியமான அமைப்புகளை இயக்குபவர்களுக்கு அதிகாரப்பூர்வ அச்சுறுத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லிண்டா கேமரூன், ரஷ்யாவை ஒன்றிணைக்கும் குழுக்களில் இருந்து வெளிவரும் இணைய அச்சுறுத்தல்களில் இருந்து எங்கள் உள்கட்டமைப்புகளை பாதுகாக்க நாங்கள் இன்னும் போதுமான அளவு செயல்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் தற்போதைய ஆபத்தை புரிந்துக்கொண்டு, தங்களை மற்றும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்