ஆசியா

12,000க்கும் அதிகமான குடியேறிகளை வெளியேற்றிய மலேசியா!

மலேசியாவில் இருந்து 12,380 கள்ளக்குடியேறிகள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து மார்ச் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மலேசியக் குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ (Ruslin Jusoh) அந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர்களில் 9,000க்கும் அதிகமானோர் ஆண்கள். எஞ்சியவர்கள் பெண்கள். பெரும்பாலானவர்கள் பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, மியன்மார் முதலிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தரை, ஆகாயம், கடல் வழிப் பயணங்களில் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

இன்னும் 11,650 கள்ளக் குடியேறிகள் தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும்  ருஸ்லின் கூறியுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!