இலங்கையர்களுக்கு வெளிநாடு ஒன்றில் வேலைவாய்ப்பு!

ஜப்பானில் திறமையான பயிற்றப்பட்ட தொழிலாளர்களாக வேலை தேடுபவர்களுக்கு விடுதித் துறையில் புதிய திறன் பரீட்சை இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
தாதி, உணவு சேவை மற்றும் விவசாயத் தொழில், கட்டுமானம், விமான நிலைய தரையைக் கையாளுதல் ஆகிய துறைகளுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் திறன் பரீட்சைகள் பரீட்சைவிண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இருந்து அடுத்த 5 வருட காலப்பகுதியில் 23,000 வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானில் தங்குமிட தொழில்களுக்காக பணியாற்ற விரும்பும் இலங்கையர்கள் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)