விளையாட்டு

IPL – 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற 6-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் எடுத்தார்.

மேலும் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷஷாங்க் சிங்கால் இந்த ரன்களை பஞ்சாப் அணி எடுக்க முடிந்தது. ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். டுபிளிசிஸ் 3, க்ரீன் 3, பட்டிதார் 18, மேக்ஸ்வெல் 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆர்சிபி.

இதனையடுத்து விராட் கோலி – அனுஜ் ராவத் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரை சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை ஸ்கெட்ச் போட்டு ஹர்சல் படேல் அவுட் ஆக்கினார். அந்த ஓவரில் 2 பவுண்டரி விளாசிய நிலையில் கடைசி பந்தில் கோலி (77) விக்கெட்டை வீழ்த்தினார்.

See also  மகளிர் T20 உலகக் கோப்பை - இரண்டாவது தோல்வியை பதிவு செய்த இலங்கை

அவர் அவுட் ஆன அடுத்த ஓவரில் அனுஜ் ராவத் 11 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் லாம்ரோர் வெற்றிக்காக போராடினார். இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஆர்சிபி அணிக்கு முதல் வெற்றி ஆகும். பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வி ஆகும்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content