உலகம்

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசுலாவில் 83 படையினர் பலி!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை Nicolas Maduro சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி இராணுவ நடவடிக்கையில் 51 வெனிசுலா படையினர் கொல்லப்பட்டனர் .

மேலும் 32 பேர் கியூபா படையினர் பலியாகியுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மதுரோவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளனர்.

இதற்கமைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது வெனிசுலாவில் மொத்தம் 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின்போது கொல்லப்பட்ட பொது மக்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.

தாக்குதலில் கொல்லப்பட்ட படையினருக்காக வெனிசுலாவில் 7 நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இடைக்கால ஜனாதிபதி இதற்குரிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் 112 வரையான வெனிசுலா படையினர் காயமடைந்துள்ளனர்.

வெனிசுலாவில் கொல்லப்பட்ட தமது நாட்டு படையினரை கியூபா பொறுப்பேற்று, அவர்களுக்கு இராணுவ மரியாதையை செலுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!