உத்தரபிரதேசத்தில் மதுவுக்கு பணம் கொடுக்க மறுத்த 80 வயது தாய் கொலை

கான்பூர் மாவட்டம் காசிகவன் கிராமத்தில், மதுபானம் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், தனது 80 வயது தாயைக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மது வாங்க 40ருபாய் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 35 வயது ராஜாராம் என்ற குற்றவாளி தனது 80 வயது தாயார் ராஜேஸ்வரி மீது தாக்குதல் நடத்தியதாக உதவி போலீஸ் கமிஷனர் ஷிகர் தெரிவித்தார்.
மோதலைத் தவிர்க்க ஒரு அறையில் தன்னைப் பூட்டிக் கொண்ட ராஜேஸ்வரியை, அவரது மகன் செங்கற்களால் கதவை உடைத்து வெளியே இழுத்துச் சென்று தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது, இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ராஜாராம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது ஊர் மக்கள் தலையிட்டு அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
(Visited 3 times, 3 visits today)