இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் மதுவுக்கு பணம் கொடுக்க மறுத்த 80 வயது தாய் கொலை

கான்பூர் மாவட்டம் காசிகவன் கிராமத்தில், மதுபானம் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், தனது 80 வயது தாயைக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மது வாங்க 40ருபாய் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 35 வயது ராஜாராம் என்ற குற்றவாளி தனது 80 வயது தாயார் ராஜேஸ்வரி மீது தாக்குதல் நடத்தியதாக உதவி போலீஸ் கமிஷனர் ஷிகர் தெரிவித்தார்.

மோதலைத் தவிர்க்க ஒரு அறையில் தன்னைப் பூட்டிக் கொண்ட ராஜேஸ்வரியை, அவரது மகன் செங்கற்களால் கதவை உடைத்து வெளியே இழுத்துச் சென்று தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது, இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ராஜாராம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது ஊர் மக்கள் தலையிட்டு அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி