ஆசியா செய்தி

சிங்கப்பூரில் 74 வயது பெண்ணுக்கு 88 வயது முதியவரின் கொடூர செயல்

சிங்கப்பூரின், புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் 74 வயது பெண்ணைக் கொன்றதாக 88 வயது முதியவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரிடாவி மொசூடின் என்ற அந்த முதியவர் மீது கொலை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் இருக்கும் பெத்தீர் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவம் குறித்து நேற்று பின்னிரவு சுமார் 1 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். அந்தப் பெண் உயிரிழந்து காணப்பட்டார்.

ரிடாவி சம்பவம் நடந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்கப்படலாம்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!