மியன்மாரில் ஜனநாயகம் பறிக்கப்பட்டு 05 ஆண்டுகள் : பிரிட்டன் கரிசனை!
மியான்மரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், நாடு ஒரு “மோசமான” சூழ்நிலையையும் “ஆழ்ந்த நெருக்கடியையும்” எதிர்கொள்வதாக இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
மியன்மாரில் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு இன்றுடன் 05 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்நாட்டு மக்களை ஆதரிப்பதில் இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை யெவெட் கூப்பர் (Yvette Cooper) மீண்டும் வலியுறுத்தினார்.
ஜனநாயக அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து மியன்மாரில் பரவலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யெவெட் கூப்பர், ஆங் சான் சூகியின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிந்ததன் மூலம், மக்களின் விருப்பம் தலைகீழாக மாற்றப்பட்டு, அவர்களின் அரசியல் சுதந்திரம் பறிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் மட்டும் பிரிட்டன் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது என்றும், 1.3 மில்லியன் மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இருப்பினும், மியான்மரில் நிலவும் நிலைமைகள் “மோசமாகவே உள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




