இந்தியா செய்தி

மத்திய பிரதேசத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மோவ் தாசில்தார் சோரல் கிராமத்தில் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இந்தூர் (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் ஹித்திகா வாசல், சம்பவ இடத்திலிருந்து தொலைபேசியில் தெரிவித்தார்.

“ஐந்து உடல்கள் மீட்கப்பட்டதன் மூலம் தேடுதல் பணி முடிவடைந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!