வட அமெரிக்கா

கனடாவில் 10 நாட்களில் 05 வங்கிகளில் கொள்ளை : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கனடா – றொரொறன்ரோ பகுதியில் உள்ள 05 வங்கிகளில் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் ரெக்ஸ்டேல் பவுல்வர்டு, எக்லின்டன் அவென்யூ ஈஸ்ட் மற்றும் லேர்ட் டிரைவ், எக்ளிண்டன் அவென்யூ வெஸ்ட் மற்றும் ரென்ஃபோர்த் டிரைவ், ராயல் யார்க் ரோடு மற்றும் லாரன்ஸ் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 20 முதல் டிசம்பர் 30 வரை 10 நாட்களில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு சம்பவத்திலும், ஒரு தனி ஆண் கத்தியைக் காட்டி வங்கிக்குள் நுழைந்து, பணத்தைக் கேட்டு கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்து தப்பித்து செல்லும் முன்பு அவர் அந்த கத்தியை பத்திரப்படுத்தியதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் 36 வயதான Jeffrey Laviolette என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது தாக்குதல் ஆயுதம் மூலம் கொள்ளையடித்ததாக ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது.

கொள்ளைச் சம்பவங்கள் குறித்து மேலும் தகவல் தெரிந்தவர்கள், காவல்துறை அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!