இலங்கை செய்தி

440 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி

இந்தியாவிலிருந்து கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி உள்ளிட்ட பலவகையான அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக, அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி, அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதிவரை, தனியார் துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!