இந்தியா செய்தி

கொல்கத்தா அருகே கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது குழந்தை

கொல்கத்தா அருகே உள்ள ஹூக்ளியில்(Hooghly), தனது பாட்டியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாரா(Banjara) சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குழந்தை, தாரகேஷ்வரில்(Tarakeshwar) உள்ள ரயில் நிலையம் அருகே கொசு வலையின் கீழ் ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர் குழந்தையின் கொசு வலையை வெட்டி கடத்தி சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட மறுநாள் குழந்தை தாரகேஷ்வர் ரயில்வே உயர் வடிகால் அருகே துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தாரகேஸ்வர் கிராமின் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தாரகேஷ்வர் காவல்துறை தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!