இலங்கையின் முன்னாள் மீன்வள கூட்டுத்தாபன தலைவர் உட்பட 4 அதிகாரிகள் கைது
இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் லலித் தௌலகல(Lalith Dhaulagala) மற்றும் மூன்று அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2020ம் ஆண்டு இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்திற்காக தேவையற்ற நேரத்தில் மணிக்கு 2,000 கிலோ மீன்களை பொதியிடும் அதிக திறன் கொண்ட பொதியிடல் இயந்திரத்தை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 5,856,116 இழப்பை ஏற்படுத்தியதற்காக ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் லலித் தௌலகல, நிர்வாக இயக்குநர் சந்தன கிருஷாந்த(Chandana Krishantha), விநியோக மேலாளர் விஜித் புஷ்பகுமார(Vijith Pushpakumara) மற்றும் செயல்பாட்டு மேலாளர் அனுர சந்திரசேன பண்டார(Anura Chandrasena Bandara) ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.




