உலகம்

கென்யாவில் வரிக்கு எதிரான போராட்டத்தில் 39 பேர் உயிரிழப்பு ;தேசிய மனித உரிமைகள் ஆணையம் தகவல்

கென்யாவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் 39 பேர் உயிரிழந்தனர் என்று கென்யா தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 360 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

திடீரென அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த பொலிஸார், பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Death toll from Kenya's anti-tax demos hits 39, over 360 injured | The  Citizen

இந்த துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கென்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு மசோதா திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இந்த நிலையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கென்யா தேசிய மனித உரிமைகள் ஆணையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளது. கென்யா நாடாளுமன்றத்தில் இயற்றப்பட இருந்த புதிய வரி உயர்வு தொடர்பான சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை வெளியிட்டது.

அதில் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் உயிரிழந்ததாகவும் 361 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 18ம் திகதி தொடங்கி ஜூலை 1ம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!