செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா அணிக்கு 359 ஓட்டங்கள் இலக்கு

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ராய்ப்பூரில்(Raipur) நடைபெறுகிறது.

நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி(Virat Kohli) 102 ஓட்டங்களும் ருதுராஜ் கைக்வாட்(Ruturaj Gaikwad) 105 ஓட்டங்களும் கே.எல் ராகுல் 66 ஓட்டங்களும் குவித்தனர்.

பந்து வீச்சில் மார்கோ ஜன்சன்(Marco Jansen) 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், 359 ஓட்ட இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா அணி தற்சமயம் 31 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!