இலங்கை செய்தி

322 சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் உருவாக்கம் வேலைத்திட்டம் ஆரம்பம்!

“சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்” வேலைத்திட்டம் இன்று (16) களுத்துறை மாவட்டத்தின் சிவ்தெவிகம கிராமத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ஒழுக்கமான மற்றும் நேர்மையான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த அணுகுமுறையுடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் Sunil Handunnethi. தலைமையில் இன்று மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால், அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம், “தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்று ஆண்டு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டமானது, ஒரு கிராமத்தின் பௌதிக வளர்ச்சியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், ஆறு முக்கிய துறைகளின் ஊடாக மக்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய கல்வி மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தி,சுகாதாரம் மற்றும் துப்புரவு, சமூக நல்வாழ்வு, கலாசாரம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய பிரதான துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.

களுத்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா) எஸ்.பி.சி. சுகீஷ்வர கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!