இலங்கை

சத்திர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த 3 வயது குழந்தை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவல முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அப்போது, ​​பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்றத்தில் சமர்பணங்களை முன்வைத்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை இரண்டு சிறுநீரகங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சத்திரசிகிச்சையின் பின்னர் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினார்.

யாழில் வாள் வெட்டில் துண்டிக்கப்பட்டவரின் கை சத்திரசிகிச்சை நிபுணரால்  மீளப்பொருத்தப்பட்டது..! - NewMannar நியூ மன்னார் இணையம்

சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்திய ஜனாதிபதி சட்டத்தரணி, இது முழுக்க முழுக்க கொலை என தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தமது தரப்பினர் பொலிஸில் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ள போதிலும், பொலிஸார் இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்போம் என பொரளை பொலிஸ் அதிகாரிகள் இதன்போது நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.இவ்வாறான விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவு அவசியா? என கேள்வி எழுப்பிய நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விசாரிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content