பெங்களூருவில் தனது 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட 27 வயது பெண்

பெங்களூருவில் பெண் ஒருவர் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 27 வயது விஜயலட்சுமி, அவரது 1 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெண்ணின் கணவரின் வேலை காரணமாக ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் பெங்களூருவில் வசித்து வந்ததுள்ளது.
சில பிரச்சினைகள் தொடர்பாக அவரது கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மூவரும் வீட்டின் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)