தாய்லாந்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 23 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது
தாய்லாந்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 23 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பக்கிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த ஜார்ஜ் வில்சன், பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 9.1 கிலோ கிரிஸ்டல் மெத் போதைபொருளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் விடுமுறையில் இருந்த வில்சன், சூட்கேஸுக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞர் மூலம் வெளிநாட்டினர் குழு ஒன்றிற்கு ஹோட்டலில் போதைப்பொருளை ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)





