இலங்கை செய்தி

நீதி நடவடிக்கை மூலம் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்யும் நீதி நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

109 சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

14 சந்தேக நபர்கள் தொடர்பான சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 184 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றினால் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்களின் பட்டியலில் இருந்த 218 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் கஞ்சா, 1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ் மற்றும் 353 கிராம் ஹஷிஸ் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 19,507 மாத்திரைகள் மற்றும் சில போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்யும் நோக்கில் கடந்த 18 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் “நீதி நடவடிக்கை” எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content