ஐரோப்பா

ஐஸ்லாந்தில் 24மணிநேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள்… 2வது முறையாக வெடித்த எரிமலை

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக்கின் அருகே ல் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் எரிமலை வெடித்தது.

ரெய்காவிக்கில் இருந்து 20 மைல் தொலைவில் ரெய்க்ஊஏன்ஸ் தீபகற்பத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்து சிதறி, தீக்குழம்பை கக்கி வருகிறது.

ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக வெடித்த இந்த எரிமலை அந்தாட்டின் பெரிய விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள போதிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ஹே ஜப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடிப்பு காரணமாக 1,00,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்