உலகம்

2035 முதல் எரிபொருள் கார்களுக்கு தடை – திட்டத்தை கைவிட்ட ஐரோப்பிய ஒன்றியம்

பெற்றோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என ஐரோபிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

என்றாலும், தற்போது இந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

தடைக்கு பதிலாக, மிக இறுக்கமான கட்டுப்பாட்டும் நிபந்தனைகளும் விதிக்கப்படும் எனவும், 2035 ஆம் ஆண்டுக்குள் தனியே மின்சார கார்கள் என்பது சாத்தியம் குறைந்த ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தனி எரிபொருளில் இயங்கும் மற்றும் எரிபொருள் – மின்சாரம் என இரண்டும் கலந்த ஹைபிரிட் இயந்திரங்கள் கொண்ட மகிழுந்துகள் அனைத்துக்கும் 2035 ஆம் ஆண்டுமுதல் தடைவிதிப்பது பல்வேறு கூட்டு காரணங்களினால் சாத்திமற்றுப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஐரோப்பிய மின்கலன் துறைக்கு 1.5 பில்லியன் யூரோக்கள் வழங்க உள்ளதாகவும், சீனாவை நம்பி இருப்பதை குறைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

TK

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!