இலங்கை

மலையகத்தில் குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் கடுமையாகும் சட்டங்கள்!

  • December 10, 2025
  • 0 Comments

மத்திய மலைநாட்டில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் குடியிருப்புகளை உருவாக்குவது தொடர்பில் கடுமையான சட்டங்களை உருவாக்குவது, அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கனமழை ஏற்பட்டால் பதுளை மாவட்டத்தின் நிலப்பரப்பில் 50 சதவீதம் வரை நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேரழிவைத் தொடர்ந்து ஆபத்தான பகுதிகளை மதிப்பிடுவதற்கு புதிய வரைபடம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) இயக்குநர் ஜெனரல் ஆசிரி கருணாவர்தன கூறியுள்ளார். கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

இறுதிப்போரை வழிநடத்திய பொன்சேகா எழுதிய நூல் வெளியீடு!

  • December 10, 2025
  • 0 Comments

இலங்கையில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய நூல் நேற்று வெளியிடப்பட்டது. “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் இந்த போரை விட்டு விடமாட்டேன்” என குறித்த நூலுக்கு பெயரடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் இதற்கான வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பிரதம விருந்தினராகவும், பாதுகாப்புச் […]

இலங்கை

இலங்கையில் மற்றுமொரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது (வீடியோ)

  • December 10, 2025
  • 0 Comments

மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் ஆபத்தை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட போதிலும் எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://web.facebook.com/reel/890871436834615

உலகம் செய்தி

சூடான் ஜன்ஜாவீத் (Janjaweed militia) போராளிக் குழுவின் தலைவருக்கு சிறை தண்டனை!

  • December 10, 2025
  • 0 Comments

சூடான் ஜன்ஜாவீத் (Janjaweed militia) போராளிக் குழுவின் தலைவருக்கு  சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளனர். 2003-2004 ஆம் ஆண்டில் வெகுஜன மரணதண்டனைகளை நிறைவேற்ற உத்தரவிட்டது மற்றும் இரண்டு கைதிகளை கோடரியால் அடித்துக் கொன்றது உள்ளிட்ட 27 போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அலி முஹம்மது அலி அப்துல்-ரஹ்மானுக்கு ( Ali Muhammad Ali Abd–Al-Rahman) ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரினர். மேற்படி […]

ஐரோப்பா

இரண்டு சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த பிரித்தானியா!

  • December 10, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் இரண்டு சீன நிறுவனங்களுக்கு  தடை விதித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவாக தகவல்களை திரித்ததாகவும்,  இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாகவும் அந்நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் ஜனநாயகங்களை சீர்குலைக்கவும், நமது முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை பலவீனப்படுத்தவும், நமது நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட கலப்பின அச்சுறுத்தலை நாம் காண்கிறோம் என பிரித்தானிய வெளியுறவுத்து தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள் கிரெம்ளினுக்கு ஆதரவாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகளை […]

அரசியல் இலங்கை செய்தி

மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களுக்கு இடமில்லை!

  • December 10, 2025
  • 0 Comments

“ அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். “ அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுவான திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்பட வேண்டும். கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் […]

இலங்கை செய்தி

16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதம்!

  • December 10, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதமடைந்துள்ளன என்று கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றுள் கோழி பண்ணைகளே அதிகம் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்துள்ள பண்ணைகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அதேவேளை, பெருமளவான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

இலங்கை செய்தி

இலங்கையை புரட்டிபோட்ட தித்வா புயல்: 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 10, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 203 பேர் காணாமல்போயுள்ளனர். 5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த […]

அரசியல் இலங்கை செய்தி

தித்வா புயல் கரையை கடந்தாலும் “அரசியல் புயல் ஓயவில்லை”!

  • December 10, 2025
  • 0 Comments

  நாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன், இது விடயத்தில் எங்கு தவறு நடந்துள்ளது என்பது பற்றி ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு விரைவில் நிறுவப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஓரிரு நாட்களுக்குள் சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு, “அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே தெரிந்தும் அது […]

செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

  • December 9, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இந்த சுற்றுப்பயணத்தின் T20 தொடர் கட்டாக்கில் உள்ள பரபாட்டி மைதானத்தில் இன்று ஆரம்பமானது. இந்நிலையில், நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்கள் பெற்றது. இந்திய அணி சார்பில், ஹர்திக் பாண்ட்யா(Hardik […]

error: Content is protected !!