செய்தி

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு

  • November 30, 2025
  • 0 Comments

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிக்கையில், இந்தத் தீர்மானம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தற்காலிக இடைநிறுத்தமானது விரிவுரைகள், பரீட்சைகள் மற்றும் பயிற்சித்திட்டங்கள் அனைத்து இதில் […]

இலங்கை செய்தி

மறுகட்டமைப்புக்காக நிதி திரட்டப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு

  • November 30, 2025
  • 0 Comments

நாட்டில் பேரிடரால் ஏட்பட்டுள்ள அழிவுகளில் இருந்து நாட்டை மறுசீரமைப்பதட்கு தேவையான மூலதனத்தை திரட்டும் (Fund) பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க இன்று தெரிவித்தார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்த நிதியை மேற்பார்வையிடுவதற்காக தனியார் துறை உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நிர்வாகக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: “அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

10 டன் நிவாரணப் பொருட்களுடன் வந்திறங்கியது இந்திய விமானம்

  • November 30, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை பேரிடருக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியதாக கூறியுள்ளார். அதற்கமைய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மற்றொரு சி-130ஜே (C-130J) விமானம், சுமார் 10 டன் பேரிடர் மீட்புப் பொருட்களை ஏற்றியபடி கொழும்பில் தரையிறங்கியுள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வானிலையைத் தொடர்ந்து, நடந்து வரும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதற்காக, இந்தப் பொருட்களில் ‘பிஷ்ம் கியூப்ஸும்’ (BHISHM Cubes) மற்றும் ஒரு மருத்துவக் […]

பொழுதுபோக்கு

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

  • November 30, 2025
  • 0 Comments

மோசமான வானிலை காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி 334 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவுக்கப்படுகின்றது.

இலங்கை செய்தி

மாவில் ஆற்று நீர்த்தேக்கக் கரை உடைப்பு

  • November 30, 2025
  • 0 Comments

மாவிலாறு அணை மற்றும் நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடைந்து காணப்படுவதினால் மூதூர். வெறுகல் . சேறுவில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இன்று (30) மாலை வரைக்கும் 16, 604 குடும்பங்களை சேர்ந்த 54 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.சுகுனதாஸ் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 204 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 477 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் மூதூர்,தம்பலகாமம், வெருகல், […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

  • November 30, 2025
  • 0 Comments

வென்னப்புவ பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர் லுணுவில கிங் ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான போது அதில் ஐந்து பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

சிசுவின் சடலத்தை கொண்டுச் செல்வதில் சிக்கல்; பெற்றோர் தவிப்பு

  • November 30, 2025
  • 0 Comments

சிசுவின் சடலத்தை ஊருக்கு கொண்டுச் செல்வதில் சிக்கல் கிளிநொச்சியில் சம்பவம்   உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின் இறுதிக் கிரியைக்காக கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. நான்கு மாதம் நிரம்பிய குறித்த கைக்குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் குறித்த குழந்தை நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிந்தது. நிலவும் சீரற்ற காலநிலையால், சொந்த இடமான சுண்டிக்குளம் பகுதிக்கு சிசுவின் சடலத்தை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இரணைமடுக் […]

இலங்கை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயமும் வெள்ளத்தில் மூழ்கியது

  • November 30, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு – வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயமும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களாக இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டிருந்தன. கடல்நீர் உட்புகுந்தும், வெள்ளப்பெருக்கும் இன்றும் குறையாமல் இருக்கின்றன. இலங்கையில் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் ஆலயத்திற்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

இலங்கை செய்தி

சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் மேலுமொருவர் உயிரிழப்பு

  • November 30, 2025
  • 0 Comments

சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் மேலுமொருவர் உயிரிழப்ப! சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரழந்த நிலையில் யாழ்.பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் உயிரழந்துள்ளார். நேற்று மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்காக சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான நாகு கிருஷ்ணமூர்த்தி எனும் மீனவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.இதன்படி சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது

பொழுதுபோக்கு

இலங்கையின் சீரற்ற வானிலைக்கு 212 உயிர்கள் பலி! 218 பேரை காணவில்லை

  • November 30, 2025
  • 0 Comments

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 பேராக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தங்களில் சிக்கி 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2,73,606 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,98,918 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் 1,275 பாதுகாப்பு […]

error: Content is protected !!