இலங்கை

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தல் : ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனம் இன்று (29.08) வெளியிடப்பட்டுள்ளது.

‘ரணிலுடன் நாட்டை வென்ற ஐந்தாண்டுகள்’ என்ற தலைப்பில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் ஐந்து முக்கிய கூறுகளை கோடிட்டுக் காட்டுகிறது. தேரவாத வர்த்தக பொருளாதாரம்,” “செயல்பாடு – 2025 க்கு அப்பால்,” “ஒரு ஒளிமயமான சமுதாயத்தை உருவாக்குங்கள்,” “தாய்நாட்டை வெல்” மற்றும் “இலங்கையை ஐக்கியப்படுத்து.” ஆகிய ஐந்து அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்த வைபவத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான அலி சப்ரி, பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனத்தை உள்ளடக்கிய www.ranil2024.lk என்ற இணையத்தளமும் இன்று இந்த விழாவின் போது ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content