இலங்கை

19வயது இளைஞனால் உக்ரேனிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஹபராதுவ, பெய்ல கொட சைத்யலங்கார விகாரையில் வழிபாடு செய்யச் சென்ற உக்ரேனிய சுற்றுலாப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞனை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உனவடுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இந்த சுற்றுலாப் பெண், கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாப் பெண் நேற்று முன்தினம் வழக்கம்போல் கோயிலுக்குச் சென்று போதி மரத்தை வழிபட்டுள்ளார்.அப்போது, குறித்த சந்தேக நபர் வந்து புத்தரின் வீட்டிற்கு வருமாறு அழைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் அழைப்பின் பிரகாரம், புத்தரின் இல்லத்தை வணங்கிவிட்டு வெளியே வந்தவுடன் குறித்த இளைஞன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓடிவிட்டதாக பொலிஸாரிடம் குறித்த பெண் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சியடைந்ததாக சுற்றுலாப் பெண் பொலிஸாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!