இலங்கை செய்தி

அக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

அக்டோபர் மாதத்தில் மொத்தம் 165,193 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.

இது 2024ம் ஆண்டு அக்டோபர் மாத வருகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரிப்பு ஆகும்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மாதம் இந்தியாவில்(India) இருந்து 29.1% அதாவது 48,113 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மேலும், பிரித்தானியாவிலிருந்து(UK) 12,934 பேர், ரஷ்யாவிலிருந்து(Russia) 11,496 பேர், சீனாவிலிருந்து(China) 10,864 பேர் மற்றும் 9,753 ஜெர்மன்(Germany) நாட்டவர்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், 2025ம் ஆண்டில் இலங்கை வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,890,687 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில், 423,405 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 174,827 பேர் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள், 133,640 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 116,741 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!