இலங்கை

சட்டவிரோதமாக போலந்திற்கு செல்ல முயன்ற 160 பேர் கைது!

பெலாரஸில் இருந்து போலந்துக்கு செல்ல முயன்ற 160 பேரை எல்லைக் காவலர்கள் தடுத்தி நிறுத்தியுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் நேற்று போலந்திற்குள் செல்ல முயன்றதாக எல்லை அதிகாரிகளை மேற்கோள் காட்டி போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோத எல்லைக் கடப்புகளுக்கு உதவியதற்காக இந்த ஆண்டு ஏற்கனவே 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 2022 இல் இருந்து இந்த வருடத்தின் ஜனவரி வரை 16 ஆயிரம் – 19 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எல்லைப்பகுதியை பாதுகாக்கவும், கண்காணிப்பை அதிகரிப்பதற்காகவும், 1000 துருப்புகளை போலந்து அதிகாரிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!