இலங்கை செய்தி

இலங்கையில் இராணுவ பணியை கைவிட்ட 15,600 இராணுவத்தினர்

இராணுவத்தினருக்கு சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

அந்த காலப்பகுதியில் 15,667 இராணுவத்தினர் சட்டப்பூர்வமாக சேவையில் இருந்து வெளியேறியதாக இலங்கை இராணுவம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

2023 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்காக இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி காலப்பகுதியில் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் 373 இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியாக இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை