உலகம்

காங்கோவில் உயிருடன் எரியூட்டப்பட்டு 15 பேர் படுகொலை! அத்துமீறும் போராளிக்குழு!

காங்கோவில் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய போராளிக்குழுவொன்று நேற்று அதிகாலை முன்னெடுத்த தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக இடூரி (Ituri) மாகாணத்தை தளமாகக் கொண்ட  மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

நேச நாட்டு ஜனநாயகப் படை அல்லது ஏடிஎஃப் நடத்திய இந்த தாக்குதலில்  ஒரு வீட்டில் 15 பேர் உயிருடன் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 07 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வேல்ஸ் வோன்குட்டு (Walese Vonkutu) நிர்வாகப் பகுதியில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏடிஎஃப் (ADF) படையின் இந்த ஊடுருவல் ஒரு உண்மையான படுகொலை” என்று மனித உரிமைகள்  மாநாட்டின் தலைவர் கிறிஸ்டோஃப் முன்யாண்டெரு (Christophe Munyanderu) தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த படுகொலைகள் தொடர்பில் ஏடிஎஃப்  (ADF) கட்சியிடமிருந்து உடனடி அறிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!