உலகம்

நைஜீரியாவில் நடந்த கோர விபத்து: பரிதாபமாக பறிபோன 147பேரின் உயிர்!

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான ஜிகாவாவில் நேற்று ஒரு எரிபொருள் டேங்கர் கவிழ்ந்தது வெடித்து சிதறியதால் குறைந்தது 147 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் மற்றும் மாநில அவசர சேவைகள் தெரிவித்துள்ளது.

நைஜீரியா நாட்டில் சரக்கு போக்குவரத்துக்கு என்று ரயில்வே கட்டமைப்பு இல்லாத காரணத்தால், பெட்ரோல் உள்ளிட்டவை டேங்கர் லாரிகள் வாயிலாக சாலை வழியே கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், இங்கு டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளாவது அதிகம்.

நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில், பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி நேற்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

அதில் இருந்து கசிந்த பெட்ரோலை பிடிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் லாரியின் முன் திரண்டனர். அப்போது ஏற்பட்ட திடீர் தீயில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில், 147 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் கடந்த 13ம் தேதி பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, எதிரே வந்த மற்றொரு லாரியுடன் மோதி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியா சாலை பாதுகாப்பு அமைப்பு, தங்கள் நாட்டில் ஆண்டுக்கு 1,000க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி விபத்துகள் நடப்பதாகவும், இதில் 500க்கும் மேற்பட்டோர் இறப்பதாகவும் கூறியுள்ளது.

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!