இந்தியா செய்தி

மணிப்பூரில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர்

மணிப்பூரில் மெய்தி, குக்கி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

7 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்ததாக மணிப்பூர் போலீசார் அறிவித்துள்ளனர்.

இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மணிப்பூர் போலீசார் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று (04.12.2023) தெங்னவுபால் மாவட்டத்தில் உள்ள சைபால் அருகே லெய்தாவோ கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்து உள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி