தெற்கு சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் மரணம்
தெற்கு சீனாவில்(China) உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் பிரதான நிலப்பகுதியில் இதுபோன்ற முதல் பெரிய சம்பவம் இதுவாகும்.
குவாங்டாங்(Guangdong) மாகாணத்தில் உள்ள சாண்டோவில்(Shandong) உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாக மாநில செய்தி நிறுவனமான சின்ஹுவா(Xinhua) தெரிவித்துள்ளது.
குவாங்டாங் மாகாண அரசாங்கம் தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க காவல்துறை, அவசரநிலை மேலாண்மை மற்றும் ஒழுங்கு அதிகாரிகளின் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஹாங்காங்கின்(Hong Kong) தாய் போ(Tai Po) மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, இதில் 160 பேர் உயிரிழந்தனர்.




