இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

9ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

போலி அடையாளம் என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி அடையாளங்கள் ஒன்லைனில் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாகவும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

போலி அடையாள அட்டைகளை விற்பனை செய்பவர்கள் 18 வயதுக்குட்பட்ட பயனர்களை குறிவைத்து, அடையாள அட்டை போலியானதா இல்லையா என்பதை அடையாளம் காணும் முக்கிய பாதுகாப்பு அம்சமான ஹாலோகிராமையும் போலியாக உருவாக்குவது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற அடையாள அட்டைகளை விற்பனை செய்பவர்கள் அல்லது வைத்திருப்பவர்களுக்கு 2,200 டொலர் வரை அபராதமும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, போலி அடையாள அட்டைகள் தொடர்பான கிட்டத்தட்ட 300 வழக்குகள் பதிவாகி, 100 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன